ஹஜ் புனித யாத்திரைக்கு 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி – சவுதி அரேபியா அறிவிப்பு!
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள கொரோனா பரவல் காரணமாக உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா அறிவிப்பு:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அண்டை நாடுகளுடனான எல்லையை மூடுதல், சர்வதேச பயணங்களுக்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
24 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சவுதி அரேபியா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.தடுப்பூசியின் பலனாக சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஆண்டுதோறும் வெளி நாடுகளில் இருந்து மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வருவார்கள். குறிப்பாக ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்க உள்ளதாக ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து முடிவு செய்துள்ளது.