ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறப்பு – ஒரு நாளில் 50% மாணவர்கள் மட்டும் வருகை!!
பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய சில வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் பேரலையாக உருவான கொரோனா தொற்று காரணமாக மாநிலங்கள் தோறும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தவிர பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், சில மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு வீதமானது ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பரவல் வீதம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால், பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன் படி ஜூன் 7 ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் – அமைச்சர் தகவல்!!
அந்த அறிவிப்பின்படி, பள்ளிகளில் குறிப்பிட்ட ஒரு நாளில் 50% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். எந்தவொரு மாணவரும் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பள்ளிக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பள்ளிகளின் இயக்கம் குறித்து அரசு உன்னிப்பாக கண்காணிக்கும் என மாகாண கல்வி அமைச்சர் முராத் ராஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.