அதிர்ச்சி தகவல்… தமிழக அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் 35% மட்டுமே தேர்ச்சி – கல்வித்துறை அறிவிப்பு!

0
அதிர்ச்சி தகவல்... தமிழக அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் 35% மட்டுமே தேர்ச்சி - கல்வித்துறை அறிவிப்பு!
அதிர்ச்சி தகவல்... தமிழக அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் 35% மட்டுமே தேர்ச்சி - கல்வித்துறை அறிவிப்பு!
அதிர்ச்சி தகவல்… தமிழக அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் 35% மட்டுமே தேர்ச்சி – கல்வித்துறை அறிவிப்பு!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை மாதம் நடந்து முடிந்த நிலையில், அதற்கான முடிவுகள் கடந்த செப். 7 ஆம் தேதி வெளியானது. அதில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வு தேர்ச்சி

தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள்.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த செப். 7 ஆம் தேதி நள்ளிரவு வெளியானது. அதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட குறைவான அளவே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கடந்த 2020 ஆண்டில் தமிழகத்தில் 57.44 சதவிதம் மற்றும் 2021 ஆண்டில் 54.40 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் 2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் 51.30 சதவிதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 16% முன்னேற்றம் – மாநில அமைச்சர் பெருமிதம்!

Exams Daily Mobile App Download

மேலும் தமிழக அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வு எழுதிய 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னையில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 17,000 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் அதில் 80 சதவித மாணவர்கள் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு வழங்காமல் இருந்தது தான் காரணம் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இனி வரும் ஆண்டுகளில் அரசு இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!