திருவண்ணாமலையில் 2500 பக்தர்கள் மட்டுமே அனுமதி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
கார்த்திகை தீப திருநாள் அன்று அண்ணாமலை கோவிலில் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம்:
கார்த்திகை முதல் நாளான நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து, பவுர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ம் தேதி அண்ணாமலைகோயில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதனை, நேரில் பார்க்க பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருவதுண்டு.
வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம் – முழு விவரங்களுடன்!!
ஆனால், இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார். மேலு, அனுமதி சீட்டு பெற்றிருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தீபத்திருவிழாவன்று அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் இருந்தே நிகழ்ச்சியை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.