தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 13 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – அமைச்சர் திடீர் உத்தரவு!
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை அதாவது 30 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 முதல் 13 நாட்கள் தான் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக எந்த பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுமே ஆன்லைன் மூலமாக தான் பாடம் நடத்தப்பட்டு வந்தது. அதே போல இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வு வைக்காமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
இந்தாண்டு கண்டிப்பாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் எனவும், அதற்கான பொதுத் தேர்வு அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு அவ்வளவாக பாடம் நடத்தாத காரணத்தினால் தற்போது வேக வேகமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சிரமத்தை போக்க பாடத்திட்டமும் சமீபத்தில் குறைக்கப்பட்டது. இன்னும் பொதுத்தேர்விற்கு சில நாட்களே உள்ளதால் மாணவர்கள் பீதியில் உள்ளனர். 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே மே 30 க்குள் தேர்வுகள் முடிவடைந்துவிடுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எதுவும் கிடையாது. ஆனால் இவர்களுக்கும் மே 13 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிந்து ஜூன் 12 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுமுறை என அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட சீர்கேட்டை சரிப்படுத்த 10 முதல் 13 நாட்களுக்குத்தான் பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டியில் இருந்து வழக்கம் போல விடுமுறை இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.