தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடக்கம்!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு இன்று முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இந்த தேர்வுகள் பிப்ரவரி 25 வரை தொடர்ந்து நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து வெகு நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 2021 – 2022 ம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை நேரடி முறையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்றாம் அலை பரவ தொடங்கியது. தமிழகத்தின் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ நெருங்கியது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – வலுக்கும் கோரிக்கை!
அதனால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உருவாக்கியது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியது. கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது ஆனாலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும்.
நெல்லை சாப்டர் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
செய்முறை தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று முதல் (பிப்.1) செமஸ்டர் தேர்வு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் வெவ்வேறு விதமாக தேர்வு நடைபெறவுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பிப்ரவரி 4 முதல் தேர்வு தொடங்கவுள்ளது. ஆன்லைன் மூலம் தேர்வை எழுதுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளது. தேர்வு நாட்களை தவிர்த்து மற்ற நாட்கள் கல்லூரிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.