SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இன்றும் (செப்டம்பர் 4) நாளையும் (செப்டம்பர் 5) கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு இணைய வங்கி சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி சேவைகள்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணைய வங்கி சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவைகள் மூலமாக SBI வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து பணம் அனுப்புவது, பெறுவது, பில் கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட பல வகையான சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்நிலையில் SBI வங்கியின் இணைய சேவைகளில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களை சரி செய்யும் வகையில் வங்கி நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
தமிழகத்தில் பள்ளிகளை திறந்ததால் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் விளக்கம்!
அந்த வகையில் SBI வங்கியின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இணைய வங்கி சேவையான யோனோ மற்றும் UPI சேவைகள் நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக SBI தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘SBI வங்கியின் இணைய வங்கி, யோனோ ஆப், UPI மற்றும் IMPS சேவைகள் செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு 10:35 மணி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 1:35 மணி வரை சுமார் 180 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும்.
தலிபான்களின் கட்டுப்பாட்டில் போராளிகளின் கோட்டை பஞ்ஷிர்? தளபதி பேட்டி!
அதனால் SBI வாடிக்கையாளர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க முயற்சிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் SBI வங்கியின், யோனோ மற்றும் UPI சேவைகளை சுமார் 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் SBI வங்கியின் இணைய சேவை 150 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கூடுதல் தகவல்.