தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா – இன்று (மார்ச் 24) ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி
தமிழகத்தில் பலர் ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகி இருக்கின்றனர். அரசு பல விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்ட போதும் கூட அதில் இருந்து மீண்டு வர முடியாமல் பணத்தை இழந்துவிட்டு கடைசியில் தற்கொலை என்ற முடிவை எடுக்கின்றனர். அதனால் ஏகப்பட்ட குடும்பங்கள் வாழ வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் குடும்பங்கள் பல கடன் பிரச்சனையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை விதிப்பது குறித்து, அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதன் பின் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அதனை ஆளுநர் மாளிகைக்கு இன்று (மார்ச் 24) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.