சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி – ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்!
கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் அனுமதி:
கொரோனா தாக்கம் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடியது. முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது நிபா வைரஸ் தாக்கம் தொடங்கி உள்ளது. இதனால் 16 வயது சிறுவன் இறந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அக்.1 முதல் இலவச புதிய வாக்காளர் அட்டை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் சுற்றுலா தலங்கள் முதலியனவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உடன் கேரள மாநிலம் இயங்கி வருகிறது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. எனவே செப்டம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு – இன்றைய விற்பனை!
கோவில் வழிபாட்டிற்கு இன்று மாலை 5 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி இருப்பது கட்டாயமாகும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.