இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

0
இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு!
இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு!
இணையவழியில் ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு சார்பாக தொடங்கப்பட்ட ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதை தொடர்ந்து தற்போது புலம் பெயர் தொழிலாளர்கள், வீடற்றோா் ஆகியோா் நலனை கருத்தில் கொண்டு “எனது ரேஷன்-எனது உரிமை” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டை முன்பதிவு திட்டம்:

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பயனாளிகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கும், இலவசமாகவும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், நிதியுதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு, வழங்கப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

மேலும் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலங்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையவழியில் ரேஷன் அட்டை பெறும் வகையில், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதாவது அஸ்ஸாம், கோவா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரா, மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, பஞ்சாப், உத்தரகாண்ட், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு

  • மேலும் ‘எனது ரேஷன்-எனது உரிமை” என்ற இந்த பொதுப் பதிவு சேவையை மத்திய உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளைச் சோ்க்கலாம். மேலும் சோதனை அடிப்படையில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில்’ இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 36 மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
  • வீடற்ற ஏழை மக்கள் வாழ்விடம் தேடி இடம்பெயர்வதால் அவா்களால் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. இதனால் வீட்டுப் பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் பிறரின் உதவியை நாடி தங்கள் தகவல்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தத் தகவல்கள் மாநில அரசுகளிடம் பகிர்ந்து சரிபார்க்கப்படும். ரேஷன் பொருட்களை பெற தகுதியானவர்களின் உரிமையை இதன் மூலம் உறுதி செய்யப்படும்.
  • இந்தத் திட்டத்தில் சோ்க்கப்பட்ட பயனாளிகள் ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின்கீழ் நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருள்களைப் பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!