தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஆன்லைன் சூதாட்டம் – அரசின் அவசர சட்டம்!

0
தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஆன்லைன் சூதாட்டம் - அரசின் அவசர சட்டம்!
தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஆன்லைன் சூதாட்டம் - அரசின் அவசர சட்டம்!
தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஆன்லைன் சூதாட்டம் – அரசின் அவசர சட்டம்!

தமிழகத்தில் சமீப காலமாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது குறித்து அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம்:

ஆன்லைன் மூலமாக சூதாட்டம் விளையாடி தமிழகத்தில் பலர் இன்று தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு விற்கின்றனர். இன்னும், சிலர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு மனம் ஒடிந்து தற்கொலை செய்து தங்கள் குடும்பங்களை தவிக்க விட்டு சென்றுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அதில் அளவில் நடந்து வருவதால், இனி இதனால் ஒருவர் கூட பாதிக்கப்பட கூடாது என்று அரசு தீர்மானம் எடுத்தது. இதனால் முக்கிய ஆலோசனை செய்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடையை தமிழகத்தில் விதிக்க உள்ளது. இது தொடர்பாக, தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி செய்திக் குறிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

 

அதில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 10.06.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தினை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

காவல் துறையினருக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி? – நீதிமன்ற உத்தரவு!

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று (26.09.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!