வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – தெரியாமல் கூட இதை ஷேர் பண்ணாதீங்க – தமிழக டிஜிபி அறிவுரை!
தமிழகத்தில் நாளுக்கு நாள் இணையதள பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. மோசடி கும்பல் வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து பணம் கையாடல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக டிஜிபி முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் மோசடி:
இந்தியா முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் மக்கள் பணம் டெபாசிட் செய்ய, பணத்தை திரும்ப எடுக்க போன்ற வேலைகளுக்காக வங்கியில் நீண்ட நேரம் காத்திருப்பார்கள். தற்போது அதற்கான அவசியமே இல்லை. வளர்ந்துள்ள தொழில்நுட்ப வசதியால் வங்கிகள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் உதவியோடு வீட்டில் இருந்தே வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை நேரடியாக மாற்றலாம்.
நிப்டி புள்ளிகள் உயர்வு – இன்றைய தேசிய பங்கு சந்தை நிலவரம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மோசடி கும்பல் வங்கி பெயரை பயன்படுத்தி பணம் கையாடல், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்தல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். சமீப காலமாக மக்களுக்கு தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக போலியான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை பொதுமக்கள் கிளிக் செய்து உள் நுழைந்தவுடன் உங்களின் வங்கி சார்ந்த விவரங்கள் ஹேக்கர்களுக்கு சென்றடைகிறது. அதனால் பொதுமக்கள் Password, OTP, A/C எண் போன்ற விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். அதனால் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.