எச்சரிக்கை மக்களே…பேஸ்புக் மூலமாக ஆன்லைன் மோசடி – இதனை செய்யவே செய்யாதீங்க!!
தற்போதைய கால கட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தற்போது பேஸ்புக் மூலமாக ஆன்லைன் மோசடி நிகழ்ந்துள்ளது.
ஆன்லைன் மோசடி
நாட்டில் அனைத்துத்துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது அனைத்து சேவைகளையும் ஆன்லைன் முறையில் பெற முடிகிறது. இதனால் பல நன்மைகளும் உள்ளது அதே சமயம் தீமைகளும் உள்ளது. அதாவது ஆன்லைனில் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த பல்வேறு வகையான உக்திகளை மோசடிதாரர்கள் கையாளுகிறார்கள். இதனால் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.
சிட்ரங் புயலின் தாக்கம் – தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்!
Exams Daily Mobile App Download
இந்த மோசடிகளில் பொது மக்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக பல்வேறு வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் வங்கி நிறுவனங்கள் தங்கள் வங்கி தொடர்பான தகவல்களை எக்காரணத்திற்கும் கேட்பதில்லை என்றும் வங்கி தொடர்பான விபரங்களை யாரிடமும் பகிரக் கூடாது எனவும் அறிவுறுத்தி வருகிறது. மேலும் எந்தவொரு வித்தியாசமான லிங்க் உங்களுக்கு அனுப்பப்பட்டாலும் இதனை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இருப்பினும் தற்போது பேஸ்புக் மூலமாக ஆன்லைன் மோசடி நிகழ்ந்துள்ளது. இதில் 51 வயதான பெண்மணி தனது சேமிப்பு பணமான ரூ.8.46 லட்சத்தை இழந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் ரூ.200-க்கு ‘Buy One get One’ என்ற ஆபரில் உணவு வாங்குவதற்காக ஒரு லிங்கை கிளிக் செய்து உள்ளார். இதில் அந்த பெண்ணின் வங்கி தொடர்பான தகவல்கள் அனைத்தும் கேட்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை நிரப்பி சமர்ப்பித்த பிறகு இவரின் சேமிப்பு பணமான ரூ.8.46 லட்சம் ஆனது திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.