HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – பெருகிவரும் ஆன்லைன் மோசடிகள்!
வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல் மூலமாகவே ஒரு லிங்க்கை அனுப்பி அதன் மூலமாகவே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற மோசடியில் இருந்து தப்பிப்பதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கி எச்சரித்துள்ளது.
HDFC வங்கி
தற்போது ஆன்லைன் மூலமாகவே பல்வேறு மோசடிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படித்தவர்களாக இருந்தாலும் கூட ஆன்லைன் மூலமாக மோசடியில் சிக்கி பல லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதாவது உங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏதேனும் பான் கார்டு விவரங்களை புதுப்பித்து தருகிறோம் என ஏதேனும் இணைப்புகளை கொடுத்து இருந்தால் அதனை ஒரு போதும் கிளிக் செய்ய வேண்டாம். அவர்கள் அனுப்பிய இணைய முகவரிக்கு சென்று விட்டாலே வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணமும் பறிபோய்விடும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இணையதளத்தின் மூலமாகவே பலரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பவர்கள் உண்மையான வலைதளத்தை போன்றே ஒரு வங்கியின் இணையதளத்தை உருவாக்கி படித்தவர்களை கூட நம்ப வைத்து மோசடி செய்து கொண்டிருக்கின்றனர். பலரும் இது தான் சரியான இணையதள முகவரியா என்பதனை சரி பார்க்காமலேயே அந்த இணைய முகவரியை கிளிக் செய்து பணத்தை இழந்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இணையதள முகவரியை கிளிக் செய்தது மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபரின் OTP என அனைத்து விவரங்களையும் கொடுத்து விடுகின்றனர். அவசியமில்லாமல் உங்களது மொபைல் எண்ணிற்கு ஏதேனும் இணையதள முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு இணையதள முகவரி வந்தால் அதனை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாமென வங்கியின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களது வங்கி கணக்கின் கடவுச்சொல் என எதையுமே யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி உங்களது மொபைல் எண்ணிற்கு ஏதேனும் சந்தேகப்படும்படியான இணையதள முகவரி வந்து இருப்பின் அதனை புகார் செய்யலாம்.