கல்லூரி, பல்கலை மாணவர்களுக்கு இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது – UGC முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனி நேரடி முறையில் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
செமஸ்டர் தேர்வு:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக அனைத்து மாநிலங்களும் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்க முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் கடைகள், அலுவலகங்களை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றதால் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
டிச.13 முதல் 1 – 7 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மாநில அரசு உத்தரவு!
அதே போல கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நடப்பு கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இனி வழக்கம் போல செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? கிறிஸ்துமஸ், புத்தாண்டு எதிரொலி!
இதையடுத்து இனி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை கல்வித்துறை தெரிவித்தது. அதனை தொடர்ந்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி செமஸ்டர் தேர்வை நேரடி முறையில் நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நேரடி முறையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்.