தமிழகத்தில் விடுமுறை நாட்களில் ஆன்லைன் தேர்வுகள் – பள்ளிகள் அறிவிப்பு!!!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை நாட்களில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிகள் பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட முழுதாக ஒரு வருடமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் இருந்தது. இதனால் மாணவர்களுக்கான பாடங்களை பள்ளிகள் ஆன்லைன் முறையில் கற்பித்து வந்தது. மேலும், பொதுத்தேர்வுகளுக்காக மாணவர்களை தயார் படுத்த இருப்பதால் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பட தொடங்கியது. இந்நிலையில் தமிழக முதல்வர் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் – துணை முதல்வர் திட்டம் !!
கொரோனா பரவல்:
மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தாலும், பாடங்கள் மாணவர்களுக்கு முழுவதுமாக கற்பிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பள்ளிகள் செயல்பட்டு வந்தது. தற்போது தமிழக மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தொற்றின் பரவல் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்தது. தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் 12ம் வகுப்பை தவிர விடுமுறை அளிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆன்லைன் தேர்வுகள்:
தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், மாணவர்களின் அடுத்த கல்வி ஆண்டு சேர்க்கை மற்றும் கற்றல் திறனை தெரிந்து கொள்வதற்காக மாணவர்களுக்கு பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிகள் அறிவித்தது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிகள் பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Plz 12th all pass pogunga onnum padikala