Online வழியில் பட்டப்படிப்பு பயில்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – UGC வெளியீடு!
இந்தியாவில் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக பட்ட படிப்புகளை நடத்த யு.ஜி.சி அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் வழியிலான பட்டப்படிப்புகள், வழக்கமான பட்டப் படிப்புகளுக்கு இணையாகக் கருதப்படும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது.
யு.ஜி.சி:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் தினசரி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து அதிகரித்த கொரோனா பாதிப்புகளால் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக தினசரி வகுப்புகளும், செமஸ்டர் உள்ளிட்ட தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை!
இந்த நிலையில் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி பல்கலைகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியில் பட்டப்படிப்பு நடத்தும் கல்லூரிகள், முன் அனுமதி எதுவும் பெற தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கல்லூரியும், பல்கலையும் பட்டப் படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.,யின் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் அதன் வழிகாட்டுதலின் பேரில் வகுப்புகளை நடத்த வேண்டும். தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலும் அனைத்து கல்லூரிகளுக்கும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.
அதனால் வழக்கமான பட்டப் படிப்புகளுக்கு இணையான, ஆன்லைன் வழி படிப்புகள் கருதப்படும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த ஆன்லைன் பட்ட படிப்பில் சேரலாம். மேலும், வழக்கமான கல்லுாரி படிப்புகளில் உள்ள, 75% வருகைப் பதிவு கட்டாயம் என்ற விதிமுறை ஆன்லைன் வழி பட்டப்படிப்பில் தளர்த்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய விதிகள் மற்றும் விவரங்கள், அடுத்த மாதம் வெளியிடப்படும் என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.