தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசு ஊழியர்கள் தங்களுடைய பணிக்காலம் முடிந்த பின் ஓய்வூதியம் பெற வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்நிலையில் ஓய்வூதியர்கள் இணையதள மின்னணு வாழ்நாள் சான்று வழங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

வாழ்நாள் சான்றிதழ்:

தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் தங்களுடைய ஓய்வூதியகாலத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக பெறுவார்கள். அந்த வகையில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்குவார்கள்.

Exams Daily Mobile App Download

ஆனால் கொரோனாவால் 2 ஆண்டுகளாக இந்த நேர்காணல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வயதானவர்களாக இருப்பதால் அவர்களால் நேர்காணலில் நேரடியாக கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்குவதில் சிரமம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் 01-07-2022 முதல் துவங்கப்பட்டது.

சென்னையில் ஜூன் 5ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று இணையதள மின்னணு வாழ்நாள் சான்று வழங்கும் சேவையை இந்திய அஞ்சல் வங்கி தபால்துறை பணியாளர்கள் மூலமாக செய்து வருகிறது. இதற்கான விண்ணப்பதிவு தொடங்கப்பட்டு அன்றைய தினமே 14,760 ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1837 ஓய்வூதியதாரர்களுக்கு தபால் துறை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திற்கு சென்று இனையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து நேர்காணல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 2022 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டு நேர்காணல் செய்யப்படுகிறது.

மேலும் இணையதள மின்னணு வாழ்நாள் பதிவு செய்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வாழ்நாள் சான்று பதிவு செய்த 3 நாட்களுக்குள் கருவூலத்தில் அளித்துள்ள கைபேசி எண்ணிற்கு வாழ்நாள் சான்று ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே ஓய்வூதியர்கள் மேற்கண்ட முறையில் இனையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!