தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுமா என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மீண்டும் ஆன்லைன் வகுப்பு:
தமிழகத்தில் கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உயிர் சேதாரங்கள் மட்டுமில்லாமல் முக்கியமாக பாதிக்கப்பட்டது மாணவர்களின் கல்வி தான். அந்த வகையில் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2000க்கு மேல் பதிவாகி உள்ளது. அதனால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுமா என மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளால் வேலைவாய்ப்புகளில் சிரமம் ஏற்படுகிறது என சில கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் பணி வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!
மேலும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆசிரியர்கள் நேரடியாக வகுப்பு நடத்துவது மூலமாகவே பாடங்கள் தெளிவாக புரிகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் ஒரு சில பள்ளிகளில் கொரோனா அச்சத்தால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் கொரோனாவால் மாணவர்களின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.