பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்? நோய் பரவல் எதிரொலி!
இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே, பல குழந்தைகள் இந்த தொற்றால் பாதிப்படைந்துள்ளதால் பள்ளிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பு:
இந்தியாவில் தற்போது புதுவகையான வைரஸ் பரவி கொண்டிருக்கிறது. அதாவது, 5 வயதிற்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பரவி கை, கால் மற்றும் வாய் ஆகிய பகுதிகளில் தடிப்புகள் ஏற்படுகின்றன. தற்போதைக்கு பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே 6 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது போக டெல்லியிலும் உள்ள பள்ளி குழந்தைகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இந்த வைரஸ் தொற்று ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு மிக வேகமாக பரவுவதால் பெற்றோர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனால், டெல்லியில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமான கல்விமுறை மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நோய் பரவல் மிகவும் வேகமாக நிகழ்ந்து வருவதால் தொற்று நோய் குறித்தான வழிகாட்டுதலை சுகாதாரத் துறை தற்போது வழங்கியுள்ளது. அதாவது, தொற்று நோய் பரவிய குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் நோய் அறிகுறியாக காய்ச்சல், பசியின்மை, தொண்டை வலி ஆகியவை ஏற்படுகிறது. இதனையடுத்து, இரண்டு நாட்களில் குழந்தையின் கை, கால், வாய் போன்ற இடங்களில் அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு
மேலும், இந்த தடிப்பு முழங்கால், முழங்கை, பிட்டம் அல்லது பிறப்புறுப்பு பகுதியிலும் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால், நோய்த் தொற்று பாதித்த குழந்தைகளுடன் பழகினால் உடனடியாக கைகளை கழுவ வேண்டும் எனவும், ஸ்பூன், கப்கள் மற்றும் பாத்திரம் என ஒவ்வொரு குழந்தைகளும் தனித்தனியாக பயன்படுத்த வேண்டும் எனவும், தொற்று பாதித்த குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.