பள்ளி மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கோடை விடுமுறையிலும் ஆன்லைன் வகுப்புகள்!
கோடை விடுமுறையின் போது பல அரசுப் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கடுமையான வெப்பத்தின் காரணமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
மேற்கு வங்க அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிப்பின் தொடர்பை இழக்கக் கூடாது என்றும், ஜூன் 16-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்றும் பள்ளிகள் கருதுகின்றன. இதனால் கோடை விடுமுறையின் போது பல அரசுப் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. இது இந்த ஆண்டு வழக்கத்தை விட கடுமையான வெப்பத்தின் காரணமாக நடத்தப்படுகிறது. கடந்த மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறனின் அடிப்படையில், கற்றல் இடைவெளிகளை சரி செய்ய வேண்டும் என்றும், அவற்றை போக்க ஆன்லைன் வகுப்புகள் தான் சரியானது என்றும் தலைமையாசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!
முன்னதாக நிலவிய வெயிலின் தாக்கம் காரணமாக கோடை விடுமுறையை மே 2ம் தேதிக்கு மாநில அரசு மாற்றியது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சகாவத் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை பாபியா சிங்க மகாபிரத்ரா, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாவிட்டால், மாணவர்களை தேர்வுகளுக்குத் தயார்படுத்த முடியாது. பருவத் தேர்வுகள் ஜூலையில் திட்டமிடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மே 6 முதல் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மூன்று இடை மற்றும் மூன்று பருவத்தேர்வுகள் மூலம் மதிப்பிடப்படுகின்றனர். பெங்காலி, ஆங்கிலம், புவியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அலிப்பூர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை ஷம்பா நாயக் கூறினார். அதன்படி நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியவுடன் பாடங்கள் மீண்டும் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.