தமிழக தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – ஜிஜி உத்தரவு!
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு நடைபெறும் ஆன்லைன் வகுப்பு பாடங்களை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகத்துக்கும் மத்திய மண்டல IG பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, சில எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவியிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறி அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பின் படி இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவை வரும் நாட்களில் செயல்படுத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் விரைவில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் உறுதி!!
தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டின் வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல ஜிஜி யாக பொறுப்பேற்றுள்ள பாலகிருஷ்ணன் என்பவர், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து தனியார் பள்ளிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, இந்த கல்வியாண்டு தற்போது துவங்க உள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளின் போது நடத்தப்படும் பாடங்கள் அனைத்தையும் பள்ளி நிர்வாகம் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த வகுப்புகளின் போது எந்தவொரு ஆசிரியர்களும் மாணவிகளின் மொபைல் எண்களை தனியாக எடுத்து பேசுவதோ, இடைபடுவதோ கூடாது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். ஆண் ஆசிரியரின் செயல்பாடு ஆன்லைன் வகுப்புகளில் எவ்வாறு உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். மேலும் மாணவிகள் மீது பாலியல் தொடர்பான தொந்தரவுகள் கொடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த புகார்களை தெரிவிக்க அதிகாரியை நியமித்து அதற்கான எண்ணையும் பதிவு செய்துள்ளார். மேலும் எந்த நேரத்திலும் அந்த எண்கள் மூலம் அழைத்து மாணவிகள் அவர்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.