ஜனவரி 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை, 11 & 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வி – மாநில அரசு உத்தரவு!

0
ஜனவரி 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை, 11 & 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வி - மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை, 11 & 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வி - மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை, 11 & 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வி – மாநில அரசு உத்தரவு!

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோய் சூழலுக்கு மத்தியில் 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்திர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளி விடுமுறை

நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா 3ம் அலைத்தொற்று நோயை கருத்தில் கொண்டு மாநிலங்கள் தோறும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச மாநில அரசு 1 முதல் 10 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மூடுவதாக அறிவித்துள்ளது. அதாவது இம்மாநிலத்தில் நேற்று (ஜன.7) ஒரு நாளில் மட்டும் 2,038 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜனவரி 16 வரை மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி – அரசு அறிவிப்பு!

இப்போது உத்திர பிரதேச மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்காக மட்டும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தருவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது அனைத்து அரசு மற்றும் அரசுப் பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் ஒரு மாணவருக்கு தடுப்பூசி போடப்பட்ட நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும் ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் உத்திரபிரதேச மாநில அரசு வெளியிட்ட புதிய விதிகளின்படி, 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள வழக்குகள் உள்ள எந்த மாவட்டத்திலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஸ்பாக்கள், திரையரங்குகள், விருந்து அரங்குகள், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களை 50% திறனில் மட்டுமே இயக்க முடியும்.

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு – தேர்வுகள் ஒத்திவைப்பு !

அதே நேரத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள 100 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் நீச்சல் குளங்கள், நீர் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நோய் தொற்று நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தேவைப்படும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!