தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் – AICTE அறிக்கை! ஓமிக்ரான் எதிரொலி!
நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து தொழில் நுட்ப கல்வி நிறுவங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,
ஆன்லைன் வகுப்புகள்:
கடந்த 2 ஆண்டுகளாக உலகையே உலுக்கி வந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றனர்.
LPG கேஸ் சிலிண்டர் மானியம் பெறாதோர் கவனத்திற்கு – இந்த ஆவணம் முக்கியம்!
கொரோனா அச்சத்தில் இருந்து தற்போது படிப்படியாக மக்கள் மீண்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு ஓமிக்ரான் பரவல் வேகமெடுக்க தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு வருவதால் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.
TNPSC 11,000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திருத்தப்பட்ட 2022 கால அட்டவணை!
அதனால் ஓமிக்ரான் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வேகமெடுத்து அவரும் ஓமிக்ரான் தொற்று காரணமாக மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.