தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை மறுநாள் (ஜூலை 28) முதல் ஆன்லைன் வகுப்புகள் – அமைச்சர் பேட்டி!
கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆன்லைன் வகுப்புகள்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். இதனால் பள்ளி முன் திரண்ட ஆயிரக்கணக்கானோர், பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தினர். பள்ளி பஸ்களையும் தீ வைத்து கொளுத்தினர். யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தாக்கிவிட்டு பள்ளிக்கூட வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். மேலும் கலவரத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதாலும், அங்குள்ள ஆசிரியர்கள் சிலர் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பதாலும் அந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த பெரிய கலவரத்தால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ-மாணவிகளும் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், முதல் கட்டமாக அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு , சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும். மேலும் கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையிலுள்ள பள்ளிகளில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எந்த முடிவாக இருந்தாலும் அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
WoW…
It’s great.