1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை சற்று ஓய்ந்து வந்த நிலையில், தொற்று குறைந்த மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் நேற்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் வகுப்புகள்:
இந்தியா முழுவதும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புதிய வகை வைரஸ் ஓமைக்ரான் தாக்கத்தை தொடர்ந்து, மீண்டும் கொரோனாவின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. இந்த வகையில் தொற்று பாதித்த மாநிலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், தொற்றின் தினசரி பாதிப்பை குறைப்பதற்கும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதன் அடிப்படையில் பள்ளி கல்லூரிகள் ஜனவரி 2 வது வாரத்தில் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
பிப். 21 முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் – எல்லைகள் திறப்பு! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதி!
இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை தற்போது நாடு முழுவதும் பல மாநிலங்களில் குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திலிருந்து படிப்படியாக குறைந்து தற்போது 83 ஆயிரத்து 876 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் மாணவர்கள் நேரடி கற்றல் முறையை கருத்தில் கொண்டும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – 500 கோடி ரூபாய் ஊழல்!
இருப்பினும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இல்லை ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், நர்சிங் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகள், நூலகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு வரும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.