பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைன் வகுப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் தொடக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1 ஆண்டாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேரடி வகுப்புகள் இல்லாத காரணத்தால் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் கால தாமதமாக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 3 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த ஜூலை 19 ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ல் தொடங்கும் என்றும் பல்கலை அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 30 வரை நடத்த வேண்டும் என்றும் டிசம்பரில் செய்முறை தேர்வு வரும் டிசம்பர் 13 செமஸ்டர் தேர்வுகளிலும் தொடங்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான அடுத்த செமஸ்டர் வகுப்புகள் ஜனவரி 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.