கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்.16 முதல் வகுப்புகள் – அறிவிப்பு வெளியீடு!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கடந்த ஜூலை 26ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மேலும் புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல கல்லூரிகளும் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிகள் மூடப்படுமா?
கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த சூழலில் கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அனைத்து பேராசிரியர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி சுகாதாரத்துறையின் மூலம் கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து மன அழுத்தத்தை போக்க மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
Tokyo Paralympics 2020: தங்கம் வென்றார் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்!
இந்த நிலையில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் தடுப்பூசி செலுத்துவது இல்லை. எனவே முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைக்காமல் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்க சென்னையில் உள்ள பல கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. வருகிற செப்டம்பர் 16 தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் கூறினார். மேலும் கல்லூரி நோக்குநிலை மற்றும் தகவல் தொடர்பு திறன் பயிற்சியுடன் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.