கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் – கொரோனா பரவல் அச்சம்! அரசு முக்கிய முடிவு!
பங்களாதேஷ் நாட்டில் தற்போது கொரோனா பரவல் பாதிப்புகள் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருவதால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை துவங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ஆன்லைன் வகுப்புகள்
உலக நாடுகளிடையே மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் மக்கள் மத்தியில் நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா பரவலால் இன்றுவரைக்கும் பங்களாதேஷ் நாட்டில் ஏகப்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதால் அனைத்து பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை ஆன்லைனில் மாற்றுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஈத்-உல்-அத்ஹா விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஆன்லைன் கல்வி முறை அமல்படுத்தப்பட்டபோது கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்கள், மோசமான இணைய இணைப்பு மற்றும் விலையுயர்ந்த மொபைல் டேட்டா இணைப்பு காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியம் – அரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள்!
இருப்பினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வங்காளதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Buet) முதுகலை படிப்புகளுக்கான நேரடி வகுப்புகளை நிறுத்த முடிவு செய்தது. இதற்கிடையில், பங்களாதேஷில் கொரோனா நேர்மறை விகிதம் கடந்த இரண்டு நாட்களில் 15%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக Buet மாணவர் நலன் இயக்குநரகத்தின் இயக்குனர் பேராசிரியர் மிசானூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.