தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆன்லைன் கல்வி – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமான அளவில் பதிவாகிறது. சுமார் 1 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து விடும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அனைவரும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு ஆன்லைன் வழி பாடங்களை முறையாக நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு முடிவு!!
அதன் படி ஆசிரியர்கள் அனைவரும் தினமும் பள்ளிகளுக்கு பணிக்கு தவறாமல் வந்து நேரத்தை வீணடிக்காமல் வாட்ஸ் ஆப் குழு மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும். பின்பு வீடியோ கால், எஸ்எம்எஸ் வாயிலாக மாணாக்கர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் மற்றும் இணைப்பு பாடங்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.