ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !
சேலத்தில் ஆன்லைன் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை நடைபெற உள்ளது. இவ் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் இந்த மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர் டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி …?
தேசிய தொழில் சேவை (NCS) https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/user-management/Login.aspx கணக்கில் பதிவு செய்து கலந்து கொள்ளவேண்டும். இந்த இணைப்பை ஜூன் 3 அன்றில் இருந்து பார்வையிடவும் அந்த இணைப்பின் மூலம் ஆட்சேர்ப்பு நிறுவனங்களிலிருந்து அழைப்புகளைப் (Calls) பெறுவீர்கள்.