ONGC நிறுவனத்தில் 3600+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!
மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணிக்கென 3614 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த இறுதி நாளானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Oil and Natural Gas Corporation (ONGC) |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 3614 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ONGC காலிப்பணியிடங்கள்:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) காலியாக உள்ள Apprentice பணிக்கு என மொத்தமாக 3614 இடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Northern Sector – 209
- Mumbai Sector – 305
- Eastern Sector – 744
- Southern Sector – 694
- Western Sector – 1434
- Central Sector – 228
ONGC Apprentice கல்வி விவரம்:
Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, BA,BBA, B.Sc, ITI, Diploma என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
ONGC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
ONGC ஊக்கத்தொகை:
Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ONGC தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் (Documents Verification) மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ONGC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 22.05.2022ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.