தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதம் ஆரம்பிக்கும் கல்வியாண்டில் இந்த முறை ஆகஸ்ட் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புக்களில் கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் செப்டம்பர் 1ம் தேதி முதல் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பாடங்கள் அனைத்தும் பள்ளியில் கற்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை (டிச.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

குறைவான கால அவகாசம் மட்டுமே பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இருப்பதால், மாணவர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல் இருப்பதற்காக பாடத்திட்டத்தில் இருந்து 30% குறைக்கப்பட்டது. மேலும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடப்பாண்டில் ரத்து செய்யப்படும் என்றும், அதற்கு பதிலாக மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இந்நிலையில், தற்போது டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1 புத்தாண்டு பண்டிகைகள் வர உள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இந்த சமயங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை.

டிச.30 முதல் ஜன.2 வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

பொதுத்தேர்வுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளதால், மாணவர்களுக்கு பாடத்திட்டம் முடிக்க இருப்பதால் விடுமுறை அளிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில் வெளியூர்களில் இருந்து பணியாற்றும் ஆசிரியர்கள் பண்டிகையை தங்களின் சொந்த ஊர்களில் சென்று கொண்டாட ஏதுவாக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை அனுப்பியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!