நடப்பு ஆண்டிற்குள் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திட்டம்!

0
நடப்பு ஆண்டிற்குள் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திட்டம்!
நடப்பு ஆண்டிற்குள் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திட்டம்!
நடப்பு ஆண்டிற்குள் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திட்டம்!

நடப்பு நிதியாண்டின் தொடக்கம் முதல் வளர்ந்து வரும் இந்திய ஐடி நிறுவனங்கள் தொழிலை மேலும், ஊக்கப்படுத்த அதிக அளவிலான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு:

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பல துறைகளும் சரிவடைந்தது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை அடைந்தது. பல வர்த்தக நிறுவனங்கள் சரிவை சமாளிக்கும் பொருட்டு தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், ஊதியத்தை குறைத்தும் வருகிறது. பல நிறுவனங்கள் சரிவை சமாளிக்க முடியாமல் தொழிலை நிறுத்தி விட்டனர். ஆனால் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் தங்கள் துறையில் அதிக வேலைவாய்ப்பை உண்டாக்கி வளர்ச்சியையும் அடைந்துள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு – மாலை நிலவரம்!

இதனால் ஐடி சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஐடி முதல் அனைத்து பிரிவுகளிலும் அதிகளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக முதலீடுகளை நிறுவனங்களில் வைத்துள்ளது. இன்னும் தங்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும் முடிவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளது. இதனால் இந்த வருடத்திற்குள் சுமார் 1,00,000 வொயிட் காலர் பணிகளை உருவாக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது என்று Xpheno வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Xpheno நிறுவனம் 234 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, முதல் 8 மாதங்களில் மட்டும் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இது வெறும் 30,000 ஆக மட்டுமே இருந்தது. மேலும், கடந்த 20 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது 2021ஆம் ஆண்டு முடிவிற்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று தெரியவருகிறது.

தமிழக அரசின் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு – உத்தரவு வெளியீடு!

எட்டெக் (கல்வி சேவை), 2. பின்டெர் (நிதியியல் சேவை துறை), 3. ஈகாமர்ஸ் (ஆன்லைன் ஷாப்பிங்), 4. லாஜிஸ்டிக்ஸ் (சரக்கு போக்குவரத்து), 4. லாஜிஸ்டிக்ஸ் (சரக்கு போக்குவரத்து) போன்ற துறைகளில்  ஸ்டார்ட்அப் சந்தையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதேபோல், ஐடி  துறையிலும் அடுத்த சில வருடங்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் அதிக ஊதியம் முதலிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!