One Station One Product: பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசின் புதிய திட்டம்!
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் One Station One Product திட்டம் 535 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிய திட்டம்:
நாட்டின் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறுகிறது. எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் One Station One Product திட்டம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் பதில் அளித்துள்ளார். அதாவது இந்த திட்டம் மூலம் நாட்டின் 535 ரயில் நிலையங்களில் ஸ்டால்கள் அமைக்கப்ட்டுள்ளதாகவும், இந்த ஸ்டால்களில் உள்ளூர் மக்களின் கலை நயம்மிக்க வேலைப்பாடு பொருட்கள், சிறப்புமிக்க பொருட்கள், ஜவுளி, கைத்தறி, பாரம்பரிய ஆடைகள் மற்றும் உள்ளூர் விவசாய உற்பத்திகள் போன்ற பொருட்கள் விற்கப்படும். இவை பழங்குடியின மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரயில்வே துறை மூலம் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.