‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ – ஒடிசாவில் மனிதநேயம்!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரத்தில் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ஒருவர் புதிதாக மருத்துவனை ஒன்றை ஆரம்பித்து ஒரு ரூபாய்க்கு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
மருத்துவ வசதிகள் அற்ற நகரம்:
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஷ்வர் நகரத்தில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில் பர்லா என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் முக்கிய நகரத்தில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளதால் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. ஏழை நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதுமான வசதிகள் ஏதும் இங்கு இல்லை.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் – அதிகாரிகள் தகவல்!!
மருத்துவரின் மனிதநேயம்:
இந்நிலையில் சங்கர் ராம்சந்தானி என்ற மருத்துவர் ஒருவர் பல் மருத்துவரான தனது மனைவியுடன் சேர்ந்து கடந்த 12ம் தேதி முதல் புதிதாக மருத்துவமனை ஒன்றை அங்கு தொடங்கியுள்ளார். அதில், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். இதனால் இந்த மருத்துவமனைக்கு ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ என்ற பெயரை மக்கள் வைத்துள்ளனர். இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 மணி நேரம் மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதனால் பல சாதாரண மக்கள் இங்கு வந்து பயனடைகின்றனர்.
மருத்துவரின் ஆசை:
இது தொடர்பாக அவர் கூறுகையில், “மருத்துவ கல்லூரியில் சமீபத்தில் தான் துணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றேன். துணை பேராசியர் தனியாக மருத்துவமனை நடத்த அனுமதியுள்ளது. அதனால் தான் ஏழைகளுக்காக இந்த மருத்துவமனையை தொடங்கினேன். இது தான் எனது நீண்ட நாள் ஆசை” என்று கூறியுள்ளார். மேலும் நோயாளிகளுக்கு தாங்கள் இலவசமாக மருத்துவம் பார்க்கிறோம் என்ற எண்ணம் வர கூடாது என்பதற்காக தான் ஒரு ரூபாய் கட்டணம் வாங்குவதாக கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்