அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் திட்டம்! புலம்பெயர் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் இவர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்:
இந்தியாவில் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு ரேஷன் கார்டு அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை புலம்பெயர் தொழிலாளர்கள் பெறுவதில் பல்வேறு சிக்கலை சந்தித்து வந்தனர். ஏனெனில் அவர்கள் தங்களது வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டமோ செல்ல வேண்டியிருக்கும். அதனால் தங்களுக்கான ரேஷன் கார்டை பயன்படுத்தி புதிய பகுதிகளில் பொருட்களை பெற முடியாது.
வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு – அதிக சம்பளம் ஈட்டும் வழிமுறைகள்!
அதனால் இவர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் பயன் அடைய வேண்டும் என்று இந்த திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த பகுதிக்கு சென்றாலும் ரேஷன் கடைகளில் தங்களின் கைரேகை பதிவை பயன்படுத்தி உணவு பொருட்களை சுலபமாக பெற்று கொள்ளலாம்.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சோதனை தேர்வு – கல்வித்துறை அறிவிப்பு!
இது குறித்து உணவு துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது, புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி அவர்கள் தங்களது சொந்த ஊரை விட்டு சென்றாலும் இந்த திட்டத்தின் கீழ் உணவு பொருளை வாங்க முடியும். இந்த திட்டத்தில் 5 முதல் 6 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இடம் பெறுகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் 77 கோடி பேர் பயன் அடைந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அசாம் மாநிலம் மட்டும் தான் இன்னும் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.