அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மேரா ரேஷன் செயலி பற்றி பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
மேரா ரேஷன் ஆப்
நாடு முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கானவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டமானது, ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி நாட்டின் எந்தவொரு மூலைக்கும் சென்று ரேஷன் பொருட்களை தடையில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இப்போது மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டம் மேரா ரேஷன் என்ற ஆப் மூலம் எளிதான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Post Office தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் – ரூ.1000 முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
அந்த வகையில் இந்த சேவையை பெறுவதற்கான மேரா ரேஷன் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. பொதுவாக ஒரே நாடு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் PDS எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களை பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, PDS நன்மைகளை பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால் அரசு அறிமுகம் செய்துள்ள மேரா ரேஷன் செயலி மூலம் பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய,
- முதலில் Google Play Storeக்கு செல்லவும்
- அங்கு தேடல் பொத்தானை கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்யவும்
- மத்திய Aepds குழு பதிவேற்றிய செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
- இப்போது பயன்பாட்டை திறந்து உபயோகித்து கொள்ளலாம்.
மேரா ரேஷன் பயன்பாட்டின் அம்சங்கள்:
- இப்போது ரேஷன் செயலியை திறந்தவுடன், சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்து ரேஷன் கார்டு எண்ணை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்
- மேலும் தங்களது இருப்பிடத்தை தொலைபேசியில் இருந்து இயக்குவதன் மூலம், பயனர்கள் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
- ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் சரிபார்க்கலாம்
- மேலும் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்
- ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை இது சரிபார்க்கிறது.
- இதன் மூலம் ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் சீடிங் முறையும் சாத்தியமாகும்.
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?
- தவிர, பயனாளிகள் தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணை பகிர்வதன் மூலம் வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடலாம் மற்றும் கருத்து தெரிவிக்கலாம்
- பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டால், நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளால் உள்நுழைவு செய்யப்படும்.
- நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களுடன் பின்னூட்டம் அளிக்கலாம்.
- இப்போது இந்த செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள்.
- ஆரம்பத்தில், இந்த செயலி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இதில் 10 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்