அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ் – மாநில அரசு அறிவிப்பு!!
பீகார் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அம்மாநில அரசு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அம்மாநிலத்தில் பணியாற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படவுள்ளது.
பணியாளர்களுக்கு போனஸ்:
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி பீகார் மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி கடைகள் ஆகியவை மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். ஹோட்டல்கள், தாபாக்கள் ஆகியவற்றில் பார்சல் சேவை, ஹோம் டெலிவரி ஆகிய சேவைகளுக்கு மட்டுமே இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும், தேர்வுகளும் நடத்தப்படாது. தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். அரசு அலுவலகங்கள் மாலை 5 மணி வரை 50% ஊழியர்களுடன் இயங்கும்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகை ரத்து – கொரோனா எதிரொலி!!
இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம். தொடர்ந்து சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டும் நோய்பரவலின் போது சுகாதார பணியாளர்களுக்கு பீகார் அரசு போனஸ் தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.