‘ஒரு வீட்டுக்கு, ஒரு வாகனம் மட்டுமே’ – மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு தகுந்த வாகன நிறுத்தும் வசதி இல்லாதது குறித்து ஒருவர் தொடுத்துள்ள பொதுநல வழக்கில் மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொதுநல வழக்கு:
தற்போது மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்பு தான் அதிகரித்துள்ளது. நகர்புறங்களில் அதிக வேலைவாய்ப்பு காரணமாக மக்கள் அதிக அளவில் குறிப்பிட்ட பகுதிகளில் குடியேறுகின்றனர். அதிக அளவிலான மக்கள் இருக்கும் நகர்புறங்களில், கூடுதலாக மக்கள் குடியேறுவதால் அங்கு வாழ்விட பிரச்னை அதிகரிக்கிறது. இந்த வாழ்விட பிரச்சனைகளை சரி செய்வதற்காக அதிக அளவில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு குறித்து ஆகஸ்ட் 15க்கு பிறகு முடிவு – அமைச்சர் தகவல்!
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக வாகானம் நிறுத்துவதற்கு என்று தனி கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் சில இடங்களில் அதற்கான இட வசதி இருக்காது. இது தொடர்பாக, நவி மும்பை பகுதியை சேர்ந்த சந்தீப் தாக்கூர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனம் நிறுத்துவதற்கு வசதி இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி திபங்கர் தத்தா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
TN Job “FB Group” Join Now
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனம் நிறுத்துவதற்கு வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் ஒன்றுக்கு அதிகமான வாகனங்களை வைத்திருக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சாலை ஓரங்களில் 30% வாகன நிறுத்துமிடமாக மாறியிருப்பதாகவும், இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தார். இதனால் புதிதாக வாகனம் வாங்கும் போது அதனை நிறுத்தி வைப்பதற்கு வசதி உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.