இரவு ஊரடங்கில் ஒரு மணி நேர கூடுதல் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் பாதிப்பு குறைந்து வருவதால் நகர்ப்புறங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இரவு ஊரடங்கு இனி 11 மணி முதல் காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இரவுநேர ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, இரவு நேர ஊரடங்கு உத்தரவு ஒரு மணி நேரம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலம் தழுவிய பொது முடக்கமானது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஜூலை 3வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு கோரிக்கை!
இந்த கட்டுப்பாடுகள் தற்போது ஒரு மணி நேரம் தளர்த்தப்பட்டு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என மத்திய பிரதேச மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் ராஜோரா தெரிவித்துள்ளார். இந்த திருத்தப்பட்ட புதிய உத்தரவு மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் உடனடியாக நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கானது கடந்த வாரம் முதல் தளர்த்தப்பட்டது. இது குறித்து மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
கிட்டத்தட்ட 35 மாவட்டங்களில் ஒரு புதிய பாதிப்பு கூட பதிவாகவில்லை. எனினும் கொரோனா தடுப்பு நெறிமுறையைப் பின்பற்றி கடைகளைத் திறந்து பொருளாதார நடவடிக்கைகளைத் தொடரலாம்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஜூலை 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் கொரோனா நிலைமை ஆய்வு செய்த பின்னர், பள்ளிகளை திறக்கும் முடிவு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 43 கொரோனா புதிய பாதிப்புகள் மற்றும் 8 இறப்புகள் பதிவாகியுள்ளன.