தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் – அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து தற்போது அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க முடிவு செய்துள்ளதாக அலுவலர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள்:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் அரசின் நிதி நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
அதனால் இன்னும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அதனால் இலங்கைக்கு உதவி புரியும் வகையில் 40 ஆயிரம் டன் உணவு பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழக அரசு வழங்க உள்ளதாகவும் அதற்கு அரசு ஊழியர்களில் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இதற்கு அனைத்து ஊழியர்களும் ஒப்புதல் அளித்து முடிவு எடுத்துள்ளதாக இது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தலைவர் வெளியிட்டுள்ளார்.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மக்களுக்கு பாதுக்காக்கும் வகையிலும் அவர்களுக்கு உதவி புரியும் வகையிலும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக அரசு அலுவலர், ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்களின் ஒரு நாள் சம்பளத்தை மே 2022ம் மாத சம்பளத்தில் பிடித்து கொள்வதற்கான அரசாணை வெளியிடுமாறு தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.