தமிழகத்தில் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை – பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
விடுமுறை:
கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் மக்களால் அதிகம் பேசப்படுவது கொரோனா வைரஸ். முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவுவதால் மக்கள் அதிகமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா 3ம் அலை பரவ தொடங்கியதாக பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
விஜய் டிவி பிரபல சீரியலில் களமிறங்கும் ஆனந்தி – புது ட்விஸ்ட்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42.5 சதவீதம் பேர் ஒரு டோஸ் மற்றும் 11.1 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதாக தரவுகள் கூறுகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது. எனவே ஆங்காங்கே தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
வனத்துறையில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
கடந்த 12ம் தேதி 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் 19ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்கள், தடுப்பூசி மற்றும் வழக்கமான வேலைகள் பாதிக்காமல் சுழற்சி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.