அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை – CEO உத்தரவு!
தமிழகத்தில் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் கொடுக்கப்பட இருப்பதால் நாளை (செப்.29) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக சில மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனது. அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக இடை நிறுத்தப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்த மாத துவக்கத்தில் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 6,9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் – கேஷ்பேக் உடன்!
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில் வேட்புமனு தாக்கலும் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அக்டோபர் 6,9 தேதிகளில் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது.
ஆப்கனில் ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை – தாலிபான்கள் உத்தரவு!
இந்த தேர்தலின் போது, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்கு மையப்பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்த 2ம் கட்ட பயிற்சி நாளை (செப். 29) நடைபெற இருக்கிறது. அதனால் நாளை ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.