சென்னை நிறுவன கண் சொட்டு மருந்துக்கு தடைபோட்ட அமெரிக்கா – ஒருவர் பலி! பலருக்கு பறிபோன பார்வை!

0
சென்னை நிறுவன கண் சொட்டு மருந்துக்கு தடைபோட்ட அமெரிக்கா - ஒருவர் பலி! பலருக்கு பறிபோன பார்வை!
சென்னை நிறுவன கண் சொட்டு மருந்துக்கு தடைபோட்ட அமெரிக்கா - ஒருவர் பலி! பலருக்கு பறிபோன பார்வை!
சென்னை நிறுவன கண் சொட்டு மருந்துக்கு தடைபோட்ட அமெரிக்கா – ஒருவர் பலி! பலருக்கு பறிபோன பார்வை!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்த EzriCare என்ற செயற்கை கண்ணீரை வரவழைக்கும் கண் சொட்டு மருந்தால் பலர் பார்வையை இழந்திருப்பதால் அமெரிக்க சந்தையில் அந்த மருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

மருந்துக்கு தடை

சென்னையில் குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில் செயற்கையாக கண்ணீரை வரவழைக்கும் EzriCare என்ற கண் சொட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் பலர் பார்வையை இழந்திருப்பதாகவும், ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஒருவர் மரணம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. அதனால் அமெரிக்கா சந்தையில் இந்த மருந்து இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது

குட் நியூஸ்.. ரூ.640 குறைந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் – இன்றைய நிலவரம் உள்ளே!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த மருந்தில் மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாவால் மாசுப்பாடு அடைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியா தொற்று மாசுபாட்டின் காரணமாக EzriCare செயற்கைக் கண்ணீர் அல்லது Delsam Pharma’s Artificial Tears போன்றவற்றை வாங்க வேண்டாம் எனவும் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம், நுகர்வோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

அது மட்டுமில்லாமல் அசுத்தமான செயற்கை கண்ணீரைப் பயன்படுத்துவது கண் நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும் எனவும், இதனால் நிரந்தரமான கண்பார்வை இழக்க நேரிடலாம், அல்லது மரணம் ஏற்பட கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், காலவதியாகாமல் இருக்கும் EzriCare, LLC மற்றும் Delsam Pharma ஆகிய செயற்கை கண்ணீர் லூப்ரிகன்ட், கண் சொட்டு மருந்துகள் என அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!