தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் தான். இப்போதைக்கு பொது இடத்தில் அபராதம் விதிப்பதற்கு மட்டும் தான் விலக்கு அளித்திருப்பதறகாவும் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முகக்கவசம்:
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2 வருட காலமாக அதிகமாக இருந்தது. அதனால் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. மக்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படாமல் இருந்தன.
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்னும் 8 நாட்கள் மட்டுமே!
இந்த நிலையில் இந்த வருடம் “கொரோனா தொற்று பல நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கூட டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது. பல மாநிலங்களில் கூட ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கிறது.
அதனால் முககவசம் அணிவது கட்டாயம் என்றும், தனி மனித இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார். தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசிகள் போட மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் சராசரியாக 70% மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மக்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.