விஜய் டிவி “குக் வித் கோமாளி” சீசன் 3 தொடங்கும் நாள் – வெங்கடேஷ் பட் சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் நகைசுவை சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கப்படும் என நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. ஏற்கனவே இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் சமையல் செய்த பிரபலங்கள் முதல், கோமாளிகளாக வந்தவர்கள் வரை நல்ல பிரபலம் அடைந்து தற்போது வெள்ளித்திரையில் பிசியாக இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசனையும் சமையல் வல்லுநர்களால் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருந்தனர்.
ஓமைக்ரான் பரவலை தடுக்க ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் திடீர் உத்தரவு!
மூன்றாவது சீசன் எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் இந்த சீசனிலும் கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து நடிவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் தற்போது நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். அதன் படி அடுத்த மாதம் பொங்கல் தினத்தன்று இந்த சீசன் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வருண், அபிநய்? போட்டியாளர்கள் சொன்ன பதில்!
மூன்றாவது சீசனுக்கு ப்ரோமோ வீடியோவிற்கான சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. ஆகையால் ரசிகர்கள் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ள நாட்களைக் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் இந்த சீசனில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், கோமாளிகளாக யார் வர இருக்கிறார்கள் என்பதை ப்ரோமோ பார்த்து தெரிந்து கொள்ளலாம். ரசிகர்கள் இந்த ப்ரோமோ எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.