பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.. பிப்ரவரியில் மாபெரும் மாநாடு!!

0
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.. பிப்ரவரியில் மாபெரும் மாநாடு!!
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.. பிப்ரவரியில் மாபெரும் மாநாடு!!
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.. பிப்ரவரியில் மாபெரும் மாநாடு!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் CPS ஒழிப்பு அமைப்பினர் இது தொடர்பாக சென்னையில் மாபெரும் மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தில் கடைசியாக ஊழியர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கொடுக்கப்படும்.

சர்வதேச விமான பயணிகளுக்கு முக்கிய விதிமுறை அறிவிப்பு – பிப். 15 முதல் அமல்! டிஜிசிஏ அறிக்கை!

Follow our Instagram for more Latest Updates

இதே போன்று, பணவீக்கம் அதிகரிக்கும்போது அகவிலைப்படியும் அதிகரிக்கப்படும். அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் ஊழியர்களின் கோரிக்கை ஏற்று பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் நிதிச்சுமையை காரணமாக காட்டி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளனர். அதனால், பழைய பென்சன் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி மாதத்தில் சென்னையில் CPS ஒழிப்பு அமைப்பினர் மாநில அளவிலான மாபெரும் மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!