தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து உயர்வு? பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் சுதந்திர தினத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் வந்த நிலையில் தற்போது விடுமுறை முடிந்து பலர் சென்னைக்கு கிளம்பினார்கள். அப்போதும் ஆம்னி பேருந்துகளின் விலை உயர்ந்து காணப்பட்டதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள்:
தமிழகத்தில் நேற்று சுதந்திரதின விழா என்பதால் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் வெள்ளிக்கிழமை முதல் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலைக்காக சொந்த ஊரை விட்டு சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வர ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு வந்தனர். ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் வேறு வழி இல்லாமல் ஆம்னி பேருந்துகளை நோக்கி படையெடுத்தனர்.
ஆனால் ஆம்னி பேருந்துகளில் அந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்தி கட்டண விலையை உயர்த்தினார்கள். இது குறித்து போக்குவரத்து கழகம் ஆய்வு நடத்தி அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளில் பயணிகளின் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்தனர். அதுமட்டுமில்லாமல், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் விடுமுறை நாட்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு கிளம்புவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால் போக்குவரத்து கழகத்தின் எச்சரிக்கையை மீறி ஆம்னி பேருந்துகள் மீண்டும் அதிக கட்டணம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரையில் இருந்து கிளம்பிய ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்து 500 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும், திருச்சி, கோவை, சேலம், ஓசூரில் இருந்து புறப்பட்ட பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் என்ற அளவில் இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். ஆனால் ஒரு சில பேருந்துகள் வழக்கமான கட்டணம் வசூலித்தாலும் பெரும்பான்மையான பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றம் சாட்டி இருக்கின்றனர்.