தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் இயக்கப்படும் பேருந்து சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆம்னி பேருந்துகளின் இயக்கமும் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் இன்று (20-04-2021) முதல் அமலுக்கு வருகிறது. இது தவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனால் மக்கள் பயன்பாட்டுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருந்தாலும் கொரோனா பரவல் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து இன்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசு அறிவிப்பின்படி இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படாது. அதனால் நெடுந்தூரம் செல்லும் அரசு பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படவுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு – பிரதமர் இன்று ஆலோசனை!!
அதே போல அரசு அறிவித்துள்ள படி இரவு 10 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆம்னி பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல 5 மணி நேரங்கள் ஆகும் நிலையில், மாலை 5 மணி வரை மட்டுமே சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்களில் சென்னையிலிருந்து 400 ஆம்னி பேருந்துகள் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.